தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டுக் கும்பல்! அரசியலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் – திமுக நிர்வாகி தொடர்பா?

தமிழகத்தை உலுக்கிய சிறுநீரக திருட்டுக் கும்பல்! அரசியலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் – திமுக நிர்வாகி தொடர்பா?

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மர்ம சம்பவம் – ஏழை மக்களின் சிறுநீரகங்களை மோசடி முறையில் பறிக்கின்ற ஒரே ஒரு கும்பல்! அந்தக் கும்பலை நடத்துபவர் திமுகவில் பதவி வகித்து வந்தவரா? என்ற கேள்வி தற்போதைய அரசியல் சூழலை பதற வைக்கும் வகையில் எழுந்துள்ளது.

திமுக ஆட்சி தொடங்கி நான்காண்டுகள் நிறைவடைந்து வரும் நிலையில், அமைச்சர்கள் பல்வேறு பிரச்சினைகளில் பேட்டிகள், விமர்சனங்கள், சமூகநீதிக் கோஷங்கள், பாஜக-அதிமுக விமர்சனங்கள் என புழங்கிக் கொண்டே இருக்க, அரசாங்க நிர்வாகம் எங்கும் சரியாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வலுப்பெறுகின்றன. அரசாங்கம் மக்களுக்கான அடிப்படை சேவைகளை விட, விளம்பரங்கள், ஊடக மேலாண்மை மற்றும் சமூக ஊடகக் கலாட்டாக்களில் ஈடுபட்டு இருப்பதாகக் கூரப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு: ஏழை தொழிலாளர்கள் இலக்காக

பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களை இலக்காகக் கொண்டு, தொழிலாளர்களாக வேலை வாய்ப்பளிப்பதாகக் கூறி, அவர்களது உடல் உறுப்புகளான சிறுநீரகங்களை சட்டவிரோதமாக அகற்றும் செயல்பாடு நடைபெற்றிருக்கிறது என தெரியவந்துள்ளது.

இந்தக் கிட்னி திருட்டுக்குழு, ஒரு லட்சம் ரூபாயை முறையான முன்பணம் போலக் கொடுத்து, மூன்று லட்சமாகக் கூறி, பின்னர் அந்த சிறுநீரகங்களை வெளிநாடுகளிலும், பின்புல சந்தைகளிலும் 50 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து பல மடங்கு லாபம் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் அரசியல் தொடர்புகள்

இந்தக் குற்றச்சாட்டுக்களில் மிகக் கவலைக்கிடமானது – இந்தக் கிட்னி கும்பலை தலைமை தாங்கியவர் திமுகவின் ஆலாம்பாளையம் பேரூராட்சி பேச்சாளர் ஆனந்தன் என்பதுதான். கட்சி நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது, திமுக நிர்வாகத்தில் பதவி வகிக்கும் ஒருவரே இவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்கிற ஐயத்தை உருவாக்கியுள்ளது.

இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை செய்யப்படுகையில், “இதே மாதிரியான சம்பவங்கள் அரிதாக நடப்பதல்ல” என அலட்சியமான பதிலை அளித்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் – “அப்படியென்றால் ஆட்சியரே இந்த நிகழ்வுகளை ஒப்புக்கொள்கிறாரா?” என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

மருத்துவமனைகள் – மருத்தவர்கள் தொடர்பு?

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் மருத்துவமனைகளும், சில பிரபல மருத்தவர்களும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள முன்னணி மருத்துவமனைகள் இச் சட்டவிரோத நடவடிக்கையில் கை கோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்திலேயே மிகப்பெரிய மருத்துவ நெட்வொர்க் கொண்ட ஒரு நிறுவனம், மற்றும் ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் மருத்துவமனை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த வாரம் சென்னை வியாசர்பாடியில், ஒரு நபருக்கு கிட்னி மாற்ற அறுவைச் சிகிச்சை செய்வதாகக் கூறி ₹1.60 லட்சம் தொகையை வாங்கி ஏமாற்றியதாகவும், இதில் திமுக நிர்வாகியான ஆரிய சங்கர் மீது நேரடியாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

90 பெண்கள் ஒற்றை கிட்னியுடன் – வறுமை விலை?

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட பெண்கள் தற்போது ஒரே ஒரு கிட்னியுடன் வாழும் சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை, ஏமாற்றப்பட்ட பணத்தால் சிகிச்சையே செலுத்த முடியாமல், பலரும் உயிருக்கு ஆபத்தான நிலைகளில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இறுதியாக: அரசியல் நடத்தை, மனித உரிமைகள் – இரண்டும் கேள்விக்குறி

இத்தகைய கொடூர சம்பவங்களை ஒட்டிய அரசியல் பின்னணி, அதிகாரிகள் அலட்சியம் மற்றும் மருத்துவதுறையின் ஒத்துழைப்பு ஆகியவை தமிழகத்தின் மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. இதை அதிகாரபூர்வமாக அரசு விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியம் தற்போது அதிகரித்துள்ளது.


Facebook Comments Box