கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வடமாநில மக்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பப்பாளி மாவு, பேப்பர் கூழ், சிறு குச்சிகள், தேங்காய் நார்களை பயன்படுத்தி ஒரு அடி முதல் 10 அடி வரை சிலைகளை செய்து வருகின்றனர்.
ராம விநாயகர், அன்னபட்சி விநாயகர், சிம்ம விநாயகர், ரிஷப விநாயகர், சூரசம்ஹார விநாயகர் என பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு அழகாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.