திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த பிரமோத்ஸவ விழாவின் 4ம் நாள்
தங்க சர்வு பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது, நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.