கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சிபிசிஐடி விசாரணைக்காக கோவை அலுவலகத்தில் சுதாகரன் நேரில் ஆஜர்!
2017 ஆம் ஆண்டில், நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொன்று, அங்கிருந்த மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தமிழக அரசு, வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்க சிபிசிஐடியை நியமித்தது. இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் தொடர்புடைய தகவல்களை அறிய, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்பேரில், வியாழக்கிழமை, கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த சுதாகரனிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.