2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக – பாஜக கூட்டணியால் திமுக தலைவருக்கு உருவான அரசியல் பதட்டம்

0

2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக – பாஜக கூட்டணியால் திமுக தலைவருக்கு உருவான அரசியல் பதட்டம்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என உறுதிப்படைத்துப் பேசியிருந்தார். ஆனால், அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே மீண்டும் உறுதியான கூட்டணி அமைந்துள்ளதாக வெளியான தகவல்கள், திமுகவுக்கு புதிய அரசியல் சவால்களை உருவாக்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சமீபத்திய தமிழக வருகை, பாஜக – அதிமுக கூட்டணிக்கு உறுதிப்பத்திரமாக அமைந்தது. கூட்டணி உறுதி செய்யப்பட்டதோடு, மேலும் சில சிறு கட்சிகளையும் இணைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளன. இது, திமுகவுக்கு எதிராக வலுவான எதிரணியாக அமையும் என்ற நம்பிக்கையை அதிமுக மற்றும் பாஜகவினர் பெரிதும் வெளிப்படுத்துகின்றனர்.

தொடர்ச்சியாக நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த கூட்டணியைப் பற்றி வெளிப்படையாக விமர்சித்து வருவது, அவருக்குள் பதற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள், சட்டமன்றப் பேச்சுகள் என அனைத்திலும் அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிக்கும் நோக்கம் தெளிவாகக் காணப்படுகிறது.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், முதலமைச்சருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதை அவர் சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பியதுதான், இந்த அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்தியது. திமுக அமைச்சர்கள் கூட்டணியை விமர்சித்தாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?” என பதிலடி கொடுத்துள்ளார்.

நீட் தேர்வு மற்றும் அரசியல் வாக்குறுதிகளை அத்துடன் இணைத்து திமுகவின் செயல்பாடுகளையும் விமர்சனம் எதிரணியில் இருந்து எழுந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நீட் விலக்கு கொடுக்க முடியுமா என திமுகவின் கேள்வியால், தங்களை ஏமாற்றப்படுகிறோம் என மக்கள் எண்ண ஆரம்பித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து திமுகவினரால் அதிமுகவுக்கு அடிமை பிம்பம் ஒட்டப்பட முயற்சி செய்யப்பட்டாலும், அதற்கு மக்கள் மத்தியில் பாசிட்டிவ் எதிர்வினை கிடைக்கவில்லை. அதே நேரத்தில், மாநிலத்தில் கூட்டு குற்றங்கள், விலைவாசி உயர்வு மற்றும் போதைப் பொருள் பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி, மக்கள் மனதில் மாற்றத்துக்கான ஆசையைத் தூண்டியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here