முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய போலீஸார், ஏற்கெனவே பதிவு செய்த வழக்கில் அவரை நேற்று கைது செய்தனர். கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ்.
ஏற்கனவே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில் வாங்கல் காவல் நிலைய வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மகேஷ் உத்தரவிட்டார். அதன் பிறகு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Discussion about this post