ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

0

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் எந்த ஒரு உளவுத்துறைக்கும் தெரியாமல் பயணிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது, தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடும் கவலை வெளியிட்டதுடன், உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அமித் ஷா, தில்லியில் இருந்து விமானம் மூலம் நேரடியாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஸ்ரீநகரில் அவர் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மாநில முதல்வர் உமர் அப்துல்லா, உள்துறை மற்றும் ராணுவம் சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முழுமையான விபரங்களை உமர் அப்துல்லா தெரிவித்தார். தாக்குதல் நேரம், இடம், பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தரப்பட்டன. அதற்கிடையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு முழுமையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அதே நேரத்தில், இந்த தாக்குதலை நடத்தியவர்களை விரைவில் கைது செய்வதற்கும், பாதுகாப்பு அமைப்புகளை மறுவமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத இயக்கங்கள் தலைதூக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. எனவே, உள்துறை அமைச்சகம், மாநில அரசு மற்றும் ராணுவ அமைப்புகள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சனையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here