புதுச்சேரியை மாநகராட்சியாக உயர்த்த முடிவு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கேற்ப, நகரத்திற்கான வளர்ச்சி திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால் அடிப்படை வசதிகள் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களின் ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.