வக்ஃப் வாரிய திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு, மசோதாவில் கொண்டு வரப்பட்ட 14 திருத்தங்களை வாக்கு அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இறுதி வரைவு மசோதா 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்ததால், நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. கூட்டுக் குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் அறிக்கையை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.