சாதி, மொழி பேதமின்றி இந்துக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், அது உலகிற்கு நன்மை பயக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
சாதி, மொழி பேதமின்றி அனைத்து இந்துக்களும் ஒன்றுபட்டால் உலகம் பயனடையும். சமூகத்தின் வலிமை அதன் ஒற்றுமையில் உள்ளது என்று அவர் தொடர்ந்து கூறினார்.
இந்து சமூகத்தின் ஒற்றுமை அதன் வலிமையை அதிகரிக்கும் என்றும் மோகன் பகவத் கூறினார்.