WhatsApp Channel
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஜனதா கட்சி ஆலோசனை நடத்தியது. ஜே.பி.நட்டா, அமித்ஷா முன்னிலையில் ஆலோசனை நடந்தது.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
அந்த மாநிலங்களுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் வியூகத்தை வகுக்கவும், தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், மத்திய குழுவை பா.ஜ., மேலிடத்தினர் அமைத்துள்ளனர். மத்திய குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஆலோசனை நடந்தது.
மத்திய அமைச்சர்கள்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி, இணைப் பொறுப்பாளர் குல்தீப் பிஷ்னோய், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரசுக்கு எதிராக யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான மத்திய குழு கூட்டத்தில் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா மற்றும் மாநில பாஜக தலைவர் அருண் சாவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்ட முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. தேர்தல் குழுவில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா மற்றும் சில மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Discussion about this post