WhatsApp Channel
கடல் மார்க்கமாக தமிழகத்துக்கு 100 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பரிமுனை, சௌகார்பேட்டை பகுதிகளில் கடத்தல் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.794 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் இருந்து சென்னை வந்த காரில் தங்கம் உருக்கும் கடையில் இருந்து 3.3 கிலோ தங்கமும், 7.55 கிலோ தங்கமும் சிக்கியது. கடந்த 11ம் தேதி சென்னை விமான நிலையத்தில் 2.97 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு தங்கம் கொண்டுவரப்பட்டு மீன்பிடி படகுகள் மூலம் தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நகைக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.50 கோடி ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டது.
கடந்த ஓராண்டில் விமானம் மற்றும் கடல் மார்க்கமாக 120 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ஹவாலா பணம் பிடிபட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post