ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் போலீசாரும் பயங்கரவாதிகளும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.
அந்த பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் மாநில போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சூழலில், ராஜ்பாக் அருகேயுள்ள காதி ஜூதானா பகுதியில் பாதுகாப்புப் படையினரை கவனித்ததும், தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் உடனடியாக பதிலடி கொடுத்து மோதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு காரணங்களால் அங்கு அதிகப்படியான கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.