வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் மாற்றங்கள் விரைவில்

0

வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் முக்கியமான மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும்.

ஏற்கெனவே மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, இந்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.

இந்த திருத்தத்தின் முக்கிய அம்சங்களில், வங்கிக் கணக்குகளுக்கு வாரிசுத் தாரர்களாக அதிகபட்சம் நான்கு பேரை நியமிக்க முடியும். இதன்மூலம் கணக்கு உரிமையாளர்கள் தங்களது சொத்துப் பராமரிப்பை எளிதாக மேலாண்மை செய்ய முடியும்.

மேலும், வங்கியின் இயக்குநர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படும் மூலதனப் பங்குத்தொகையின் வரம்பு, தற்போதைய ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 2 கோடி வரை உயர்த்தப்படும். இதனால், வங்கி நிர்வாகத்தில் உயர் மட்ட அதிகாரிகள் அதிக பங்கு கொள்ள வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here