ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் – ஸ்லோவாக்கியா அதிபர் ஆதரவு
இந்தியா, ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐ.நா.) பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெரிதும் விரும்பி, பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஸ்லோவாக்கியா நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பீட்டர் பெல்லேக்ரினி, இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கடந்த வாரம் ஸ்லோவாக்கியாவுக்கு அதிகாரப்பூர்வமாகச் சென்றிருந்தார். அவரை வரவேற்ற அதிபர் பெல்லேக்ரினி, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆலோசனை நடத்தினார். இருநாடுகளும் பொருளாதாரம், அறிவியல், கல்வி மற்றும் பண்பாட்டு பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளன.
அந்த சந்திப்பின் போது, இந்தியாவின் பழமையான தத்துவ இலக்கியங்கள் ஸ்லோவாக்கியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள், திரௌபதி முர்முவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இது இந்தியா-ஸ்லோவாக்கியா கலாசார உறவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த வகையான பரிமாற்றங்கள், நாடுகளுக்கிடையே புரிதலை வளர்த்தெடுத்து, சிறந்த நட்பு உறவுகளுக்கு வழிகாட்டும்.
அதிபர் பெல்லேக்ரினி, இந்தியாவின் வளர்ந்து வரும் நாட்டு எனும் அடையாளத்தைப் பாராட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா சேர வேண்டும் என்பது உலகத்தின் நிலையான வளர்ச்சிக்கும், சமத்துவத்திற்கு உதவும் எனத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“இந்தியா உலக அமைதிக்கும், சமாதான முயற்சிகளுக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் உண்மையான பங்களிப்பை ஒப்புக்கொண்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும்.”
இந்த சந்திப்பு, உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பெருமையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் மூலம், பல நாடுகள் இந்தியா பக்கம் குவிந்து வருகின்றன என்பது உறுதியாகிறது.