வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு நன்றி – பிரதமர் மோடியை சந்தித்த தாவூதி போரா இஸ்லாமியர்கள்
வக்ஃப் வாரியத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவரும் சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, தாவூதி போரா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக வக்ஃப் வாரியங்களில் ஏற்பட்டு வந்த செயல்திறன் குறைபாடுகள், வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாகம் ஆகியவற்றை சீர்செய்யவேண்டும் என்பது தாவூதி போரா சமூகத்தினரின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில், மோடி அரசு வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் மாற்றங்கள் மற்றும் பொது நலனுக்கேற்ற விதிகளில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவந்தது. இது சமூக நலனுக்கேற்றவையாகவும், வக்ஃப் சொத்துகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதற்கான வழிகாட்டுதலாகவும் அமைகிறது என்று போரா சமூகம் தெரிவித்தது.
இந்த சட்ட திருத்தம் மூலம் வக்ஃப் சொத்துகள் பற்றிய பதிவு முறைகள், கணக்கெடுப்பு, சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போரா சமூகத் தலைவர்கள், தனது சமூகத்தின் மனவிருப்பத்தை பிரதமருக்கு நேரடியாகத் தெரிவித்தனர். “நீண்ட காலமாக நாங்கள் எதிர்பார்த்த நியாயமான மாற்றங்களை இப்போது பார்க்க முடிகிறது. உங்கள் அரசு எங்கள் குழப்பங்களை கவனித்து, நம்பிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது,” என தெரிவித்தனர்.