பஹல்காம் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங்-ராணுவத் தளபதி அனில் சவுகான் ஆலோசனை!

0

பஹல்காம் தாக்குதல் குறித்து ராணுவத் தளபதி அனில் சவுகான், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கர் கலந்து கொண்ட கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், ராணுவத் தளபதி அனில் சவுகான், டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here