மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் அகில பாரத இந்து மகாசபையின் தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் கோவையில் இருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டு வரும் சுவாமி சக்ரபாணி மகராஜ், மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு வருகை தந்தார்.
அப்போது, அகில பாரத இந்து மகாசபையின் தமிழ்நாடு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கோயில் வாசலில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிலம்ப மாணவர்கள் சிலம்பத்தைச் சுற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, விநாயகர், மயூரநாதர் சன்னதிகளில் சுவாமி சக்கரபாணி மகராஜ் சிறப்பு தரிசனம் செய்தார்.