சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் – இந்திய ராணுவம் பதிலடி…!

0

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்ததாகவும், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஆறாவது நாளாக எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here