ட்விட்டரில் தடைசெய்யப்பட்டது …. நைஜீரியா இந்தியாவின் ‘கூ’ செயலியில் கணக்கைத் தொடங்கியது…. Banned on Twitter …. Nigeria started account on India’s ‘Koo’ processor

0
சமூக வலைப்பின்னல் தளமான ட்விட்டருக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட கூ செயலியில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசாங்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக ட்விட்டரில் பேசியுள்ளார். இதை அமெரிக்காவைச் சேர்ந்த ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. அதன்பின்னர் ட்விட்டருக்கு நைஜீரிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த சூழலில், பெங்களூரு, கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்ட ‘கூ’ செயலியின் பயன்பாடு நைஜீரியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த செயல்பாட்டில், நைஜீரிய அரசாங்கத்தின் சார்பாக கணக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூவின் தலைமை நிர்வாக அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறினார்: “நைஜீரியா அரசாங்கத்தின் சார்பாக எங்கள் செயலியில் கணக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய மொழியில் இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவைத் தொடர்ந்து, நாங்கள் எங்கள் இறக்கைகளை மற்ற நாடுகளுக்கும் விரித்துள்ளோம்.
தகவல் தொழில்நுட்ப திருத்தத்தில் இந்திய அரசு விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். எங்கள் செயலியை நீங்கள் பல மொழிகளில் பயன்படுத்தலாம். மேலும் வசதிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த செய்தியையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here