இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’: 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் – முழு விளக்கம்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் சுற்றுலா மையத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மனிதாபிமானத் தாக்குதலுக்குப் பின்னால் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகள் குறித்து பாதுகாப்புத்துறை விசாரணைகளை தீவிரப்படுத்தியது.
இந்த தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து, பாதுகாப்பு துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோருடன் அவர் பலத்த ஆலோசனைகளை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்ற குறியீட்டுப் பெயரில் இந்தியா அதிரடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை முக்கியமான 9 பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்கியுள்ளது. அவை பின்வருமாறு:
- மர்கஸ் சுப்ஹான் அல்லா – பகவல்பூர்
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய முகாமாகும். மசூத் அசார் இங்கு தங்கியிருந்து இயக்கத்தை வழிநடத்துவதாக நம்பப்படுகிறது. - மர்கஸ் தைபா – முரிட்கே
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைமையிடம். இது மிகவும் பாதுகாப்பாக அமையப்பெற்ற இடமாகும். - சர்ஜல் / தெஹ்ரா கலன்
பல பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கும் பகுதி. - மெஹ்மூனா ஜோயா வசதி – சியால்கோட்
பயங்கரவாதிகளின் தங்குமிடம் மற்றும் ஆயுத களஞ்சியம் உள்ள இடமாக உள்ளது. - மர்கஸ் அஹ்லே ஹதீஸ் – பர்னாலா, பிம்பர்
இஸ்லாமிய தீவிரவாத பிரிவுகளுக்கான முக்கிய பயிற்சி முகாம்களுள் ஒன்று. - மர்கஸ் அப்பாஸ் – கோட்லி
பயங்கரவாதத் தளவாடங்களை சேமித்து வைத்திருக்கும் முகாம். - மஸ்கர் ரஹீல் ஷாஹித் – கோட்லி மாவட்டம்
பயிற்சி முகாம்கள் மற்றும் மறைவிடங்களைக் கொண்ட இடம். - ஷவாய் நல்லா கேம் – முசாஃபராபாத்
ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் பயிற்சி நடத்தும் முகாமாக பயன்படுகிறது. - மர்கஸ் சையத்னா பிலால்
பயங்கரவாதிகளுக்கான உளவுத்துறை திட்டமிடும் முகாம்.
இந்த தாக்குதல்கள் அனைத்தும் இந்திய விமானப்படையால் தீவிரமாகவும் திட்டமிட்டவாறும் முன்னெடுக்கப்பட்டன. முக்கியமானது என்னவென்றால், இந்த தாக்குதல்கள் இடம் பெற்றவை பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளில் தான்.
இந்த நடவடிக்கை மூலமாக இந்தியா, பயங்கரவாதத்திற்கு எதிராக தைரியமாகவும் உறுதியாகவும் செயல்படுவதாகவும், தன்னைக் குறி வைத்து நடத்தப்படும் எந்த அத்துமீறலுக்கும் வலுவான பதில் தரும் சக்தியாகவும் உலகம் முழுக்க ஒரு தெளிவான செய்தியைக் கொடுத்துள்ளது.