ஆபரேஷன் சிந்தூர் – குங்குமத்தின் பெயரால் வீரத்தால் வெற்றியடைந்த இந்திய ராணுவம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் (PoJK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைச் சுட்டெடுத்து அழிக்க, இந்தியா மேற்கொண்ட ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டது. இந்தப் பெயருக்குப் பின்னாலுள்ள கருத்தும், அதற்குப் பொருளும் மிக ஆழமானதும், உணர்ச்சிகரமானதும் ஆகும்.
இந்த ஆபரேஷனைப் பெயரிடுவதற்கான அடிப்படை காரணம், பஹல்காம் பகுதியில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில் பதினைந்து ஜோடிகளில் உள்ள ஆண்கள், வெறிக்கொண்ட தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் தான். பயங்கரவாதிகள் அவர்கள் இந்து ஆண்கள் என உறுதி செய்த பிறகு மட்டும் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில், திருமணமான ஆறே நாளில் தேனிலவுக்குச் சென்ற கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலும் வீரமரணமடைந்தார். அவரது மனைவி ஹிமாங்கி நர்வால், கணவனின் உடலுக்கு அருகே நெற்றியில் குங்குமத்துடன் கண்ணீருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம், இந்தியா முழுக்க தேசத்தைத் துள்ளடையச் செய்தது.
இந்த சம்பவம் மட்டுமல்லாமல், மேலும் 25 பெண்கள் தங்கள் கணவர்களை இழந்தனர். ஒரே நாளில் அவர்கள் நெற்றியிலிருந்த குங்குமம், பயங்கரவாதத்தின் கொடூரத்தில் அழிக்கப்பட்டது. இந்த உணர்ச்சியை முன்வைத்து, இந்தியா தனது பதிலடி நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டது.
சிந்தூர் என்பது நம் பாரம்பரியத்தில் இல்லறத்தின் அடையாளம் மட்டுமல்ல; பதி பக்தியின் வெளிப்பாடாகவும், பெண்ணின் பாதுகாப்பின் அடையாளமாகவும், நம்பிக்கையின் நிறமாகவும் விளங்குகிறது. மேலும் நாட்டை காக்க போர்க்குசெல்லும் வீரர்களின் நெற்றியில் வெற்றித் திலகமாக அடிக்கப்படும் சிந்தூர், இந்த ஆபரேஷனுக்குப் பெயராய் மாறியது என்பது உணர்வுப் பூர்வமாகவும், சக்திவாய்ந்த அறிவிப்பாகவும் இருக்கிறது.
இந்த வீர நடவடிக்கையை இந்தியா மிகத்துல்லியமாகவும், ஒருங்கிணைந்த ரீதியிலும் முடித்தது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பல பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் “நாங்கள் வளையல் அணிவதில்லை” என இந்திய மக்களை ஏளனமாக பேசியதற்கான பதிலாக, இந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் “வளையல் அணிந்த கைகள்” பயங்கரவாதத்தை வேரறுக்கும் திறனைக் காட்டின.
இதன் மேலும் சிறப்பு அம்சமாக, இந்த நடவடிக்கையை நமது மகளிர் வீரர்கள், லெப்டினன்ட் சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர் முன்னணியில் இருந்து வழிநடத்தினர். இது பெண்களின் வீரத்தையும், பாதுகாப்பின் முனைவாக இந்தியா எப்படி செயல்படுகிறது என்பதையும் வெளிக்கொணருகிறது.
ஆபரேஷன் சிந்தூர், வெறியாட்ட பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட குங்குமத்தின் பெயராலே, இந்திய ராணுவம் எடுத்த துல்லியமான, நீதிமிகு பதிலடி நடவடிக்கை. இது நாட்டின் வீரமும், பெண்களின் பெருமையும், குங்குமத்தின் கௌரவத்தையும் காக்கும் சின்னமாகும்.
ஜெய்ஹிந்த்!