இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானின் பாதுகாப்பு தோல்வி
பாகிஸ்தான் ஆதரவில் நடப்பதா எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கையை தீவிரமாக நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முக்கியமான 9 பயங்கரவாத தளங்களில் 21 பயிற்சி முகாம்கள் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டன. 24 ஏவுகணைகளை 25 நிமிடங்களில் துல்லியமாக வீசி இந்தியா இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இந்த தாக்குதலின் முக்கிய அம்சம் – பாகிஸ்தான் தனது HQ-9 வகை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியா எறிந்த ஏவுகணைகளை நடுவானில் தடுக்க முடியாமல் போனது. HQ-9 அமைப்புகள் சீனாவால் உருவாக்கப்பட்டவை. பாகிஸ்தான், 2021ல் இவை 125–300 கி.மீ. தூரம் தாக்கக்கூடியதாகும் என நம்பிக்கையுடன் இராணுவத்தில் சேர்த்திருந்தது. ஆனாலும், இந்திய ஏவுகணைகள் உயர்தொழில்நுட்பத்துடன் துல்லியமாக இலக்கைத் தாக்கியதால், HQ-9 செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்திய விமானப் படைக்கு சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், சுகோய்-30 உள்ளிட்ட வான் தாக்குதல் உபகரணங்கள் பாகிஸ்தான் எதிர்பார்த்ததைவிட முன்னேற்றமுள்ளவை. இந்தியா 2016ல் பிரான்ஸுடன் 36 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து, தற்போது மேலும் 26 விமானங்களை கடற்படைக்காக வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பாகிஸ்தானும் இராணுவ மேம்பாட்டில் சீனாவின் ஆதரவை நாடி வருகிறது. JF-17 Block III, J-10CE போர் விமானங்கள் மற்றும் PL-15 ஏவுகணைகள் ஆகியவை பாகிஸ்தான் இராணுவத்தில் உள்ளன. எனினும், இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கு நிகரான பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானுக்கு இல்லை என்பது முக்கியமான குறைபாடாகும்.
மேலும், சீனாவிலிருந்து SH-15 வகை Mounted Gun Systems, ட்ரோன்கள், மற்றும் HQ-16 வான் அமைப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியில் 81% சீனாவிலிருந்தே வருகிறது.
இந்தியாவின் தாக்குதல்களை எதிர்க்கும் வகையில் பாகிஸ்தான் வைத்திருக்கும் அனைத்தும் பழையவையாகவும், திறனற்றவையாகவும் உள்ளன என்பதே தற்போதைய உண்மை நிலை. இந்த சூழலில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர், பாதுகாப்பு வலிமையிலும், சாகச ரீதியிலும் இந்தியா மேலோங்கியுள்ளதாக இராணுவ வல்லுநர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.