டெல்லியில் அமித்ஷா உள்பட 6 மத்திய அமைச்சர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்திப்பு….

0

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட 6 மத்திய அமைச்சர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து பேசினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்றார். டெல்லியில் அவர் 6 மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து மாநிலத்துக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, கிரேஹவுண்ட்ஸ் பயிற்சி மையம் அமைக்க தேவையான நிலத்திற்கு ரூ.385 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுவரை ரூ.27.54 கோடி செலவினத் தொகையை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதேபோல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வெளிவட்ட சாலை திட்டம் குறித்து கூறினார்.

இதேபோல் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் சந்தித்து கோரிக்கைகளை அரசுக்கு அளித்துள்ளனர். முன்னதாக அவர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here