மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ‘துடிப்புமிகு கிராமங்கள் திட்டம்’ குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துடிப்புமிகு கிராமங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: எல்லையோர மக்கள் வேலைக்காக இடம்பெயர்வதைத் தவிர்க்க, அவர்களின் வாழ்விடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் உள்ளூர் கூட்டுறவு நிறுவனங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.