தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்திய கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததையடுத்து, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.
நம் நாட்டில் தொலைத்தொடர்பு துறை மிகவும் முக்கியமானது. இந்த டெலிகாம் நிறுவனங்கள் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் இணையத்தை கொண்டு சேர்க்கின்றன.
முன்னதாக தொலைத்தொடர்பு துறையில் பல நிறுவனங்கள் இருந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இப்போது, ஜியோ, ஏர்டெல், VI நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இதேபோல் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.
டெலிகாம் நிறுவனங்கள்: டெலிகாம் துறையில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதற்கிடையில், ஜியோ தனது கட்டணத்தை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்தது. ஜியோ கட்டணங்கள் 12% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தபோது, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) புகார் அளித்துள்ளனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும், உயர்த்தப்பட்ட பிறகும், உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தை இந்தியா பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்: இருப்பினும், இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் மகிழ்ச்சியடையவில்லை. இதற்கிடையில், விலை உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 27.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் பெற்றுள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்: மொபைல் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற போர்டிங் ஆப்ஷன் உள்ளது. இந்த விருப்பத்தை பயன்படுத்தி பலர் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களில் இருந்து BSNL க்கு மாறி வருகின்றனர்.
கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததில் இருந்து சுமார் 2.50 லட்சம் பேர் மற்ற நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர்.
தக்கவைக்க நடவடிக்கை தேவை: தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் BSNL இன் திட்டங்கள் குறைவாகவே உள்ளன. BSNL மிகவும் மலிவு திட்டங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் இந்த வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க BSNL அதன் நெட்வொர்க் தரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், 4ஜி கவரேஜை மேம்படுத்த வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.