நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

0

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘நீட் தேர்வு விவகாரம்’, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்தல்’ உள்ளிட்ட 17 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நீட் தேர்வு விவகாரம், ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் ஒப்புதல் அளித்தனர்.

அதன்படி, இந்த 3 தீர்மானங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த தீர்மானங்கள் பேரவையில் விவாதித்து நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கிரேட்டர் பெங்களூரு ஆளுமைச் சட்டம்-2024’க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பாட்டீல் தலைமையிலான நான்கு பேர் கொண்ட நிபுணர்கள் குழு, பெங்களூரு மாநகராட்சியை மறுசீரமைக்கக் கோரி கர்நாடக அரசிடம் ஒரு மாதத்திற்கு முன்பு அறிக்கை சமர்ப்பித்தது.

உள்கட்டமைப்பு, மேம்பாடு மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பெங்களூருவுக்கு முன்னுரிமை அளிக்க, ‘கிரேட்டர் பெங்களூரு ஆணையம்’ (ஜிபிஏ) உருவாக்கப்பட வேண்டும். பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை 400 வார்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் ‘கிரேட்டர் பெங்களூரு ஆளுமைச் சட்டம்-2024’க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here