பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், பெண்களும் அபார திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களுக்கு வேட்டையாடி வருகின்றனர்.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜெனா (குரூப் ஏ) மற்றும் நீரஜ் சோப்ரா (குரூப் பி) ஆகியோர் கலந்துகொண்டனர். குரூப் ஏ பிரிவில் தகுதிச் சுற்றில் பங்கேற்ற கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறினார்.
இதையடுத்து, குரூப் பி பிரிவில் தகுதிச் சுற்றில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
Discussion about this post