நிலச்சரிவு தொடர்பாக வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை பகுதியில் இந்திய ராணுவம் அமைத்துள்ள தற்காலிக பாலத்தின் வழியாக நடந்து சென்ற பிரதமர் மோடி, நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். இதன்பின், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியுள்ள மக்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிலச்சரிவு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;
வயநாடு பேரழிவு ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை சிதைத்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதில் இருந்து, ஒவ்வொரு பணியையும் கண்காணித்து வருகிறேன். நிலச்சரிவைத் தொடர்ந்து கேரள அரசுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டன.
வயநாடு பேரழிவு சாதாரணமானது அல்ல. மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு. கேரளாவுக்கு தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படும். அவர் கூறினார்.
Discussion about this post