புருனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

0

புருனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவும் புருனேயும் தற்போது தூதரக உறவுகளின் 40 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. இந்நிலையில், அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று புருனே சென்றார்.

புருனேயின் தலைநகர் பந்தர் செரி பெகவான் செல்லும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மோடி சென்றார். அப்போது அங்கு காத்திருந்த இந்தியர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை சிங்கப்பூர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here