தொழில்துறை முதலீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பின்தங்கியுள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

0

தொழில்துறை முதலீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பின்தங்கியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவில், கோயம்புத்தூரில் செயல்படும் ஒரு ஐடி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் 2,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஐடி ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அசல் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்று கூறிய அண்ணாமலை, முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் முயற்சிகள் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் 2 ஸ்டார்ட்அப்கள் கோயம்புத்தூரிலிருந்து பெங்களூருக்கு இடம்பெயர்ந்ததைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, 2022 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட ரூ.6,000 கோடிக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு முதலீடு கிடைக்காதது ஆச்சரியமல்ல என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here