மதுரை வந்த மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலூர் அருகே அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்பட இருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் தமிழக பாஜக மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஏ. வல்லாளபட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டனர்.
விமான நிலையத்திலிருந்து அரிட்டாபட்டிக்குச் சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு, அண்ணாமலை செல்லும் வழியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.