முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தை போல கனவு கண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் மும்மொழிக் கொள்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, குழந்தை போல கனவு கண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டியதை விமர்சித்தார். தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு ஏதாவது அறிவித்துள்ளதா என்றும், திமுக மக்களிடையே தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.