பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டால் பாஜக பங்கேற்கும் என்றும், ஊகங்களின் அடிப்படையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊகங்களின் அடிப்படையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்றும் கூறினார். தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றும், முதல்வர் ஸ்டாலின் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் கூறினார்.
தேர்தல் நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றி தனக்குத் தெரியும் என்றும், 2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே நோக்கம் என்றும் அண்ணாமலை கூறினார்.