பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டும்வர்கள் சிறை செல்லுவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், பல நூறு கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றதாக திமுக அரசு அறிவித்தது. ஆனால், கோவிலில் அடிப்படை வசதிகள் கூட போதுமான முறையில் ஏற்படுத்தப்படவில்லை என்பது தொடர்ச்சியாக செய்திகள் மூலம் வெளிச்சம் பார்த்து வருகிறது.
இந்நிலையில், கோவிலுக்குள் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை காணொளியாக பதிவு செய்த தமிழக பாஜகவின் பிரதீப்ராஜன் வீட்டிற்கு, அதிகாலை 4 மணிக்கு காவல்துறையை அனுப்பி மிரட்டியிருக்கிறது திமுக அரசு.
தமிழகத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தளங்களில் ஊழல் சர்வதிகமாக பரவியிருக்கிறது. தமது ஊழல்களை வெளியிடுபவர்களை கட்டுப்படுத்த காவல்துறையையோ, ரவுடிகளையோ பயன்படுத்துவது திமுக அரசின் வழக்கம் ஆகி விட்டது.
இந்தக் கொடுங்கோன்மை முறையை கடுமையாக கண்டிப்பதுடன், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டியவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்லும் என்பதும் உறுதி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.