தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி ஏற்பாட்டில் புனித ரமலான் நோன்பு திறப்பு (இஃப்தார்) விழா சிறப்பாக நடைபெற்றது…

0

இந்நாள், தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி ஏற்பாட்டில் புனித ரமலான் நோன்பு திறப்பு (இஃப்தார்) விழா சிறப்பாக நடைபெற்றது.

முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட விழா

இந்த நிகழ்வில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) உள்ள பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் தமிழக முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. வைத்தியலிங்கம், அமமுக பொதுச் செயலாளர் திரு. தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. பாலு கலியபெருமாள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. முனவர் பாஷா, மாநிலத் துணைத் தலைவர் திரு. விடியல் சேகர், புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு. ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து, தமமுக தலைவர் திரு. ஜான் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின் நிறுவனர் திரு. கே.கே. திருமாறன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்

நாடு முழுவதும் பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் அதிக அளவில் நலத்திட்டப் பயனாளிகளாக உள்ளனர். குறிப்பாக:

  • பாரத பிரதமரின் வீடமைப்பு திட்டத்தில் – 31% சிறுபான்மையினர் வீடு பெற்றுள்ளனர்.
  • முத்ரா கடனுதவித் திட்டத்தில் – 36% சிறுபான்மையினர்கள் பயனடைந்துள்ளனர்.
  • விவசாயிகள் கௌரவ நிதி உதவியில் – 33% சிறுபான்மையினர் இடம் பெற்றுள்ளனர்.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டவர்களில் – 37% சிறுபான்மையினர் உள்ளனர்.
  • சிறுபான்மையின மாணவிகளுக்கு பள்ளிக் கல்விக்குப் பின் – ₹51,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பல நலத்திட்டங்கள் பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்காக எந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது? என்பது கேள்வியாக உள்ளது.

தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த விழாவில், முன்னாள் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் திரு. கரு நாகராஜன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் திரு. அமர் பிரசாத் ரெட்டி, தேசிய சிறுபான்மையினர் அணிச் செயலாளர் திரு. வேலூர் இப்ராஹிம், சிறுபான்மையினர் அணி மாநிலத் தலைவர் திருமதி. டெய்ஸி தங்கையா, மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு. ANS பிரசாத், மற்றும் பல பாஜக நிர்வாகிகள், சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இவ்விழா சிறப்பாக நடைபெற்றதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி ஏற்பாட்டில் புனித ரமலான் நோன்பு திறப்பு (இஃப்தார்) விழா சிறப்பாக நடைபெற்றது… அண்ணாமலை உரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here