நாத்திக நாடகத்தால் இந்து நம்பிக்கையை அவமதிக்க வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

0

நாத்திக நாடகத்தால் இந்து நம்பிக்கையை அவமதிக்க வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசையும், அமைச்சர் சேகர்பாபுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “நாத்திகம்” என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்கள் தொடரும் பட்சத்தில், மக்கள் தக்கபடியான பதிலடி அளிப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக ஊடகப் பதிவில், அண்ணாமலை கூறியிருப்பதாவது:

“திமுக அமைச்சர்களிடையே, முதல்வரின் குடும்பத்துக்கு யார் சிறந்த ‘கொத்தடிமை’ என்பதை நிரூபிக்க போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியிலேயே அமைச்சர் சேகர்பாபு, மறைந்த கருணாநிதியின் நினைவிடத்தை கோவில்கள் போல அலங்கரித்து, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்துகிறார்.”

அத்துடன், திமுகவினர் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என சொல்லிக்கொண்டு, தொடர்ந்து இந்து மதத்தை குறிவைத்து விமர்சிப்பதை ஒரு “தொழிலாக” மேற்கொண்டு வருவதாகவும், இது நாளடைவில் மக்கள் கோபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்ணாமலை மேலும் தெரிவித்ததாவது:

பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் தலைவரின் மீது உண்மையான பாசம் இருந்தால், சேகர்பாபு அவர்கள் தனது வீட்டு பூஜையறையில் அவரின் புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். ஆனால், கோவில்களின் வடிவத்தில் அவரை விளங்கச் செய்தல், இந்து நம்பிக்கையை அவமதிப்பதாகும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் மதம் சார்ந்த அரசியல் விவாதங்கள் மீண்டும் தலைதூக்கும் நிலை காணப்படுகிறது. திமுக-பாஜக இடையேயான மதத்தையும், மரபையும் சார்ந்த சச்சரவுகள் தேர்தல் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரமடைந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here