தமிழக அரசியலில் இருந்து திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைச்சர்கள் பதவி நீக்கத்தை தான் கருதுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில், இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, ஒரே நாளில் தமிழ்நாட்டில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
ஊழலின் முழு உருவகமான செந்தில் பாலாஜியையும், பெண்களை அவமானப்படுத்திய பொன்முடியையும் வேறு வழியில்லாமல் திமுக அரசு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுக கட்சியின் வரலாற்றைப் பார்த்தால், அது ஊழல் மற்றும் தரக்குறைவான செயல்பாடுகளால் நிறைந்துள்ளது என்றும் அவர் கூறினார். தமிழக மக்களின் எதிர்ப்புக் குரலால் திமுகவின் அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அமைச்சர்கள் பதவி நீக்கத்தை தமிழக அரசியலில் இருந்து திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகக் கருதுவதாகவும் அண்ணாமலை கூறினார்.