காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 9ஆம் தேதி, மலைப்பட்டை பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேஷின் வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் ராஜேஷை சரமாரியாக கத்தியால் தாக்கி, 8 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேஷ், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கொள்ளையர்கள் பூந்தமல்லி பகுதியில் பதுங்கியிருந்த தகவலைப் பெறினர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சுற்றிவளைப்பில், 9 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.