தலைவர்கள் – தேச நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஓர் தகவல்… கருங்கல் காவல் ஆய்வாளர் அவர்களின் ஒற்றை நிலைப்பாடு

0

தலைவர்கள் மற்றும் தேச நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஓர் தகவல்

கிள்ளியூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொழிக்கோடு அருகே அமைந்துள்ள பூயோடு பகுதியில், சமீபத்தில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. இந்து ஆலய திருவிழாவின் போது, பட்டிமன்றம் நிகழ்ச்சி இரவு 10 மணிக்குப் பிறகும் தொடர்ந்து நடைபெற்றது. இதனை கருங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் நேரில் சென்று தடுத்து நிறுத்திய சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கவலைக்குரிய விவாதமாக மாறியுள்ளது.

அதேபோல், மிடாலம் பகுதியில் அமைந்துள்ள கும்பளங்காவு ஸ்ரீ மகாதேவர் ஆலயத்தில், சிவராத்திரி விழாவை முன்னிட்டு திரைப்படம் திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால், கருங்கல் காவல்துறையினர் இரவு 10 மணிக்குப் பிறகு அவகாசம் வழங்க மறுத்தனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதே காவல்துறை, 26/02/2025, 27/02/2025 ஆகிய தினங்களில், ஆலஞ்சி RC சர்ச்சில் நடைபெற்ற இன்னிசை கச்சேரி மற்றும் பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் இரவு 11:30 மணி வரை நடைபெற்றபோது எந்தவித தடையும் ஏற்படுத்தவில்லை. இந்த முறையில் விதிமுறைகளை செயல்படுத்தும் பாகுபாடான அணுகுமுறை பொதுமக்களிடையே கோபத்தையும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் உருவாக்கியுள்ளது.

கன்யாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பொதுவாக இரவு 11 மணி வரை நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த அனுமதி குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமா, அல்லது அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இது போன்ற நிகழ்வுகளுக்கு சமமான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். எந்த சமுதாயத்தினரின் விழாக்களாக இருந்தாலும், ஒன்று போலக் காணப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைப்பாடு அவசியம். நம்மோடு பயணம் செய்கிற கிறிஸ்தவ தேசப்பற்றாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் ஒற்றுமையாக வாழ, அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

எல்லா சமுதாயங்களும் சமமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதே உண்மை ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம். எனவே, அதிகாரிகளின் செயல்பாடுகளில் சமத்துவமான அணுகுமுறையை உறுதி செய்ய, நீதிபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த சமத்துவ கோரிக்கையை ஆதரித்து, ஒரு நீதி நிலைபெறும் சமுதாயத்திற்காக ஒன்றிணைய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here