சிவகங்கை அருகே மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள் – ஆனால் நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடி கிராமத்தில், மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையிலும், காவல்துறை இந்த மூவரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை விடுவித்தது. இதனால், காவல்துறையின் செயல்பாட்டுக்கு இளைஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பவத்துக்கு பதிலளிக்குமாறு அந்த காவலரை வற்புறுத்திய போதிலும், அவர் இம்மூவரையும் எச்சரிக்கையின்றி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்து, காவல்துறை இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தில் சீரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.