சேலம் லயன்மேடு பகுதியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் – பொதுமக்கள் அதிர்ச்சி!
சேலம் லயன்மேடு பகுதியில் நடந்த ஒரு பரபரப்பு சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இரண்டு சிறுமிகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள், அவர்களுடைய பர்தாவை கழற்றச் சொல்லி அதை எடுத்துச் செல்ல முயன்றனர். இதைக் கவனித்த ஒரு நபர், சிறுவர்களிடம் காரணம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் வழங்கவில்லை. சந்தேகத்துடன் அந்த நபர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கினார்.
தகவல் கிடைத்ததும், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் (S.S.I) மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர், சிறுவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது, திமுக நிர்வாகியான ராமலிங்கம் இடையில்சென்று தடுக்க முயன்றார். அதன்மீது, அவர் காவல் அதிகாரியை நேரடியாக மிரட்டியதுடன், “தங்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” எனக் கூறியதாலும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் சமூகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு காவல்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.