மிடாலம் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்த வழக்கில் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனை – ₹100 அபராதமும் விதிப்பு
கன்யாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமாக உள்ள ராஜேஷ்குமார் மீது அரசு அதிகாரிகளை தடுத்ததாக புகார் எழுந்தது. கன்யாகுமரி மேற்கு மண்டலத்தில் உள்ள மிடாலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்க அரசு அதிகாரிகள் சென்றபோது, அவர்களை ராஜேஷ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அதிகாரிகள் மீது தாக்குதல் நிகழ்ந்ததையும் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், அரசு பணியாளர்களை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று (21-04-2025), அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஹெர்குலஸ் ஆஜராகி வாதிட்டு, நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு வழங்கினார். வழக்கில் மூவர் இறந்துவிட்டதால் அவர்கள்மீது வழக்கு நிறைவு செய்யப்பட்டது. ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த எஞ்சிய மூன்று பேருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனடிப்படையில் ராஜேஷ்குமார் உட்பட மூன்று பேருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும், ₹100 அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைக்கேற்ப, இது அவரின் எம்.எல்.ஏ. பதவிக்கு சட்டப்படி நேரடி பாதிப்பாக இருக்காது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ராஜேஷ்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.