வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டால் சுட்டுக் கொல்ல வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியதால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தற்போது ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபடுபவர்களை சுட்டுக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது