சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.