முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வாதிட்டார். செந்தில்பாலாஜி உடல் நலக்குறைவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை என்ன விசாரணை நடத்துகிறது, எப்போது விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை.
எப்போது விசாரித்து முடிவெடுப்பார்களோ கடவுளுக்குத்தான் தெரியும். உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்பது செந்தில் பாலாஜியின் வாதமாக இருந்தது.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகாததால், வழக்கை வேறு நாளைக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் நாளை மறுதினம் ஒத்திவைத்துள்ளனர்.