கிழக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல மாதங்கள் நீடித்த போரில், தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 100 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இப்பள்ளி பாதுகாப்பு முகாமாக பயன்படுத்தப்பட்டு ஏராளமான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததை அறிந்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.