செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து வீடியோ மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து செந்தில் பாலாஜி வீடியோ மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றிய ஹரீஷ்குமார் ஆஜராகாததால் இன்று குறுக்கு விசாரணை நடைபெறவில்லை.
Discussion about this post