அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்: “திமுக ஆட்சியை எதிர்ப்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுவர்!”
சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற பிறகு, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மேலும் வலுப்பெறும். நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன் – திமுக ஆட்சியை எதிர்ப்பவர்களும், அதிமுக மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் NDA கூட்டணியில் இணைய திட்டமிட்டு வருகின்றனர். இது நிச்சயமாக நடைபெறும்” என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.