தொழிலாளர் நலவாரியங்களை நாசமாக்கும் தொழிலாளர் துறையை கண்டித்து பி.எம்.எஸ். போராட்டம் – குமரி மாவட்டத்தில் திரளானோர் பங்கேற்பு
கன்யாகுமரி மாவட்டம் முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களை நாசமாக்கும் தோழிலாளர் துறையின் நடவடிக்கையை கண்டித்தும், தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யும் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாரதிய மஜ்தூர் சங்கம் (BMS) சார்பில் வலியுரைத்த ஆர்ப்பாட்டம் 21 ஏப்ரல் 2025 அன்று நடைபெற்றது.
இந்த போராட்டம் கல்குளம், கிள்ளியூர், திருவட்டார் உள்ளிட்ட பல தாலுக்கா அலுவலகங்கள் முன் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நடைபெற்றது. குறிப்பாக, விளவங்கோடு தாலுக்கா அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது,
- E.P.F திட்டத்தின் உறுப்பினராக இருந்து, பல ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, காரணம் காட்டாமல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- ஓய்வூதியம் மாதம் ₹5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும்,
- தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் மொத்தம் 11 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் உற்சாகமான கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் தொழிலாளர்கள், சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொழிலாளர் நலவாரியங்கள் மூலமாக சமூக பாதுகாப்பு மற்றும் நியாயமான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.
தொழிலாளர் நலவாரியங்களை நாசமாக்கும் தொழிலாளர் துறையை கண்டித்து பி.எம்.எஸ். போராட்டம் AthibAn Tv